Tuesday, February 3, 2009

காணவில்லை!

தேசியக் கொடியில்
திடீரெனக் காணவில்லை அசோகச் சக்கரம்
தேடிச் சென்றால்
ஈழத் தமிழர்களின் கழுத்தின் மீது!
காங்கிரஸ் கொடியில்
ராட்டை தொலைந்து வெகுநாட்களாயிற்று
ரத்தக்கறை படிந்த கை அந்த இடத்தில்!
ராஜீவ் போனாலென்ன
மனைவி கை, மகன் கை, மகள் கை!
மன்மோகன் சிங்குக்கு
அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப்
பெருவியப்பு
இந்தியாவில் துடிப்பதன் எதிரொலி இலங்கையில்!
பழைய "மனோகரா" வசனப் புத்தகத்துடன்
உச்ச நீதிமன்றத்தின் பின்னே ஒருவர்
மஞ்சள் துண்டால் வியர்வை துடைத்தபடி!
காற்றுப் புரட்டிய பக்கத்தில்
"புறநானூற்றுப் புகழை மறைக்க வந்த
புழுதிக் காற்றே!"
மானம், வெட்கம், சூடு, சொரணை
மருந்துக்குக்கூடக் காணோமே!
மனைவியர், மக்கள், பேரன், பேத்திகள்,
பதவிகள், சொத்து, சுகம், நீடிக்கும் ஆயுள்;
முத்துக்குமார் செத்தாலென்ன,
பள்ளபட்டி ரவி செத்தாலென்ன,
ஈழத்தமிழனென்ன
ஈரோட்டுத் தமிழன் செத்தாலும்
இறங்கற்பா எழுத முடியாது;
பிடுங்கிச் சென்றுவிட்டாராம் பேனாவை
பிரணாப் முகர்ஜி!

1 comment:

  1. மிக அருமையான வரிகள்.
    செருப்பால் அடிக்க வேன்டும் அவனை. செருப்பு கேவலப் பட்டு போகும்.

    ReplyDelete