Tuesday, January 27, 2009

குண்டுவீச்சு... கிரிக்கெட்...

தொலைக்காட்சியில்
பீரங்கித் தாக்குதலும் விமானத்தாக்குதலும்
சில நொடிகள் மட்டும்
பெரும்பாலும் இருட்டடிப்பே
ஆனால்
நேரடி ஒளிபரப்பு
நொடி தவறாமல்
பந்துவீச்சும் மட்டையடியும்
மீண்டும் மீண்டும் பலமுறை
மெதுவான காட்சியாக
ராஜபக்சேவின் குண்டுவீச்சுக்குச்
சற்றும் குறைந்ததல்ல
இந்தியனின் பந்துவீச்சுக்கு
சற்றும் குறைந்ததல்ல
இந்தியனின் பந்துவீச்சு
பிரணாப் முகர்ஜிக்கு நேரமில்லை
சிவசங்கரமேனன்
நாள் குறித்துத் தந்துவிட்டுத்
திரும்பிவிட்டார்
ராஜவிசுவாசத்திலும் மேலான
ராஜபக்சே விசுவாசம்
டோனியும் டெண்டுல்கரும்
ஐஎஸ்ஐ முத்திரை தாங்கிய இந்தியர்கள்
முத்தையா முரளீதரன் என்ற
முழிமுழிச்சான்
இனப்படுகொலையாளிக்கு
இப்படியும் ஒரு எட்டப்பன்
இந்தியக் கிரிக்கெட் வாரியம்
கிளீன்போல்டு ஆக்கிவிட்டது
இங்குள்ள தமிழர்களை
ரன்அவுட் ஆக்கத் துடிக்கும்
ராஜபக்சேவுக்கு
நடுவராக நடுவண் அரசு
அவ்வப்போது கேட்ச் பிடித்துக்கொடுத்து
ஒரேயொரு வருத்தம்
கண்டுகளிக்கும் வாய்ப்பிழந்து
மருத்துவமனைகளில்
மாட்டிக்கொண்டனரே
பிரதமரும் முதல்வரும்!

1 comment: