Showing posts with label கிருஷ்ணா. Show all posts
Showing posts with label கிருஷ்ணா. Show all posts

Monday, March 9, 2009

அழுகிய முட்டைகள்!

சோழர்கள் கட்டிய கோயிலைச்
சோற்றுத் துருத்திகள் கைப்பற்றியது
வேர்வை சிந்தியென்றால் உண்மைதான்-
கோல மயில்களும் மயக்குவிழி மான்களும்
வசந்த மண்டபக் குளிர் தென்றலிலும்
சந்தனம் குங்குமம் கரைந்து வழியச்
சிந்திய வேர்வையால்தான்!
சமஸ்கிருத மந்திரங்கள்
தென்னாடுடைய சிவன் மீது தொடுத்த
அழுகிய முட்டை வீச்சின்
தொடக்கமன்றோ!
சூட்சுமங்கள் கைவிட்ட நிலையில்
தீட்சிதர்களுக்குத் தோள் கொடுக்கச்
சோழவந்தான் சாமி
இட்லிக் கடைப் பூட்டை உடைத்த
தெம்புடன்!
மகளிர் அணியினர் வழங்கிய
தர்ம தரிசனத்தைவிடவா
நாற்றமெடுத்தது
அழுகிய முட்டை வீச்சு!
சிந்தனை அழுகிய
சித்து விளையாட்டுக்காரர் மீது
விழுந்த அவமானத்தால் அழுகிறது முட்டை!
இடைக்கால அறிக்கை
கிருஷ்ண, கிருஷ்ணா!
தடியடி, உதை, மிதிபட்டவர்களின்
மீது
தம் பங்குக்கு வீசிய
அழுகிய முட்டைகளால் நாறிக் கிடக்குது
உச்சநீதி மன்றம்!
---------------------------