Saturday, April 25, 2009

வெட்கம் என்ன விலை?

ஐந்தாண்டுக் காலத்தில்
சம்பளமும் சலுகைகளும்
ஒரு கேள்வியேனும் கேட்காத
ஊமைச்சாமிகளுக்கு!
மீண்டும் தொகுதி பெற்றுக்
கூப்பிய கரங்களுடன் வந்தால்
செவிப்பறையில் மோதும் ஒரு கேள்வியால்
சுளுக்கு நீங்கட்டும்
ருசிக்கெனவே பிறந்த நாக்குக்கு!

No comments:

Post a Comment