Monday, March 30, 2009

கோபுர தரிசனம்!

"டேய்! தாத்தா உன்னைப் பாக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படுறார். போய் ஒரு நாலு நாள் அவர்கூட இருந்துட்டு வாயேன்."

"என்னால நாலு நாள்லாம் இருக்க முடியாதும்மா. எப்படியாவது ரெண்டு நாள் இருந்துட்டு வாரேன்."

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பிறந்த ஊருக்கு வந்ததுமே தாத்தா அவனை அழைத்துக் கொண்டு போய் ஆண்டாள் கோயிலைச் சுற்றிக் காட்டினார்.

"இந்தக் கோபுரந்தான் தமிழ்நாட்டு அரசாங்க முத்திரையில இருக்குதாக்கும்!" - பெருமை பொங்கக் கூறினார் தாத்தா.

மறுநாள் சூரியன் உதிக்கும் போதே மொட்டை மாடிக்குச் சென்ற தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.

கோபுரத்தை நோக்கியவாறு இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியவாறு கும்பிட்டுக் கொண்டே ஏதோ ஒரு பாசுரத்தை முணுமுணுத்தார். வழிபாடு முடிந்தது.

மாடியின் ஒவ்வொரு பகுதிக்கும் நகர்ந்து கொண்டிருந்த அவனை வேடிக்கை பார்த்தார் தாத்தா.

"இங்கே கெடைக்கலியே" என்றவன் சற்றுத் தள்ளி நின்று "இங்கேயும் கெடைக்க மாட்டேங்குதே" என்றான்.

"என்னப்பா கெடைக்கலே?"- பரிவுடன் கேட்டார்.

"போங்க தாத்தா, உங்களுக்கு டவர் தெரிஞ்சாப் போதும் நிம்மதி. என் செல்போனுக்கு டவர் கெடைக்கலியே! பேசாம அரசாங்கத்துக்குச் சொல்லி காலத்துக்குத் தகுந்தாப் போல செல்போன் டவரச் சின்னமாப் போடச் சொல்லுங்க. கட்டாயம் எல்லா இடத்துலேயும் கெடைக்க ஏற்பாடு பண்ணுறதுக்கு வழி பிறக்கும். மதச் சார்பற்ற அரசாங்கம்னும் பேர் கிடைக்கும்" என்று பேரன் கூறியது புரியாமல் .

No comments:

Post a Comment