யாருக்குத் தெரியும்?
-------------------------
கடும் வறட்சியிலும் பூத்துக் குலுங்க
வியந்தோர் பல்லாயிரவர்-
நீர்தேடி அலைந்தவை வேர்கள்!
இப்படி ஓர் ஆறுதல்!
-------------------------
பள்ளத்தில் விழுந்தது பூனை
பதற்றம் தணிந்ததும் பெருமை-
யானைக்கு வெட்டிய குழுயாம்!
உரிமைக் குரல்!
--------------------
"சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை"
திலகரை வழிமொழிந்து இன்று
"சுயராஜ்ஜியம் எனது வாரிசுரிமை!"
Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts
Saturday, April 25, 2009
சர்வம் எந்திரம் மயம்!
கட்டளையை ஏற்றுக்
கை உயர்த்தவும் கீழே போடவும்
ஏற்ற எந்திரத்தைத் தேர்ந்தெடுக்க
வாக்குப்பதிவு எந்திரத்தின் முன்
வரிசையாய்க் காத்து நிற்கின்றன
காசு வாங்கிய எந்திரங்கள்!
கை உயர்த்தவும் கீழே போடவும்
ஏற்ற எந்திரத்தைத் தேர்ந்தெடுக்க
வாக்குப்பதிவு எந்திரத்தின் முன்
வரிசையாய்க் காத்து நிற்கின்றன
காசு வாங்கிய எந்திரங்கள்!
வெட்கம் என்ன விலை?
ஐந்தாண்டுக் காலத்தில்
சம்பளமும் சலுகைகளும்
ஒரு கேள்வியேனும் கேட்காத
ஊமைச்சாமிகளுக்கு!
மீண்டும் தொகுதி பெற்றுக்
கூப்பிய கரங்களுடன் வந்தால்
செவிப்பறையில் மோதும் ஒரு கேள்வியால்
சுளுக்கு நீங்கட்டும்
ருசிக்கெனவே பிறந்த நாக்குக்கு!
சம்பளமும் சலுகைகளும்
ஒரு கேள்வியேனும் கேட்காத
ஊமைச்சாமிகளுக்கு!
மீண்டும் தொகுதி பெற்றுக்
கூப்பிய கரங்களுடன் வந்தால்
செவிப்பறையில் மோதும் ஒரு கேள்வியால்
சுளுக்கு நீங்கட்டும்
ருசிக்கெனவே பிறந்த நாக்குக்கு!
Monday, March 30, 2009
கோபுர தரிசனம்!
"டேய்! தாத்தா உன்னைப் பாக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படுறார். போய் ஒரு நாலு நாள் அவர்கூட இருந்துட்டு வாயேன்."
"என்னால நாலு நாள்லாம் இருக்க முடியாதும்மா. எப்படியாவது ரெண்டு நாள் இருந்துட்டு வாரேன்."
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பிறந்த ஊருக்கு வந்ததுமே தாத்தா அவனை அழைத்துக் கொண்டு போய் ஆண்டாள் கோயிலைச் சுற்றிக் காட்டினார்.
"இந்தக் கோபுரந்தான் தமிழ்நாட்டு அரசாங்க முத்திரையில இருக்குதாக்கும்!" - பெருமை பொங்கக் கூறினார் தாத்தா.
மறுநாள் சூரியன் உதிக்கும் போதே மொட்டை மாடிக்குச் சென்ற தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.
கோபுரத்தை நோக்கியவாறு இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியவாறு கும்பிட்டுக் கொண்டே ஏதோ ஒரு பாசுரத்தை முணுமுணுத்தார். வழிபாடு முடிந்தது.
மாடியின் ஒவ்வொரு பகுதிக்கும் நகர்ந்து கொண்டிருந்த அவனை வேடிக்கை பார்த்தார் தாத்தா.
"இங்கே கெடைக்கலியே" என்றவன் சற்றுத் தள்ளி நின்று "இங்கேயும் கெடைக்க மாட்டேங்குதே" என்றான்.
"என்னப்பா கெடைக்கலே?"- பரிவுடன் கேட்டார்.
"போங்க தாத்தா, உங்களுக்கு டவர் தெரிஞ்சாப் போதும் நிம்மதி. என் செல்போனுக்கு டவர் கெடைக்கலியே! பேசாம அரசாங்கத்துக்குச் சொல்லி காலத்துக்குத் தகுந்தாப் போல செல்போன் டவரச் சின்னமாப் போடச் சொல்லுங்க. கட்டாயம் எல்லா இடத்துலேயும் கெடைக்க ஏற்பாடு பண்ணுறதுக்கு வழி பிறக்கும். மதச் சார்பற்ற அரசாங்கம்னும் பேர் கிடைக்கும்" என்று பேரன் கூறியது புரியாமல் .
"என்னால நாலு நாள்லாம் இருக்க முடியாதும்மா. எப்படியாவது ரெண்டு நாள் இருந்துட்டு வாரேன்."
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பிறந்த ஊருக்கு வந்ததுமே தாத்தா அவனை அழைத்துக் கொண்டு போய் ஆண்டாள் கோயிலைச் சுற்றிக் காட்டினார்.
"இந்தக் கோபுரந்தான் தமிழ்நாட்டு அரசாங்க முத்திரையில இருக்குதாக்கும்!" - பெருமை பொங்கக் கூறினார் தாத்தா.
மறுநாள் சூரியன் உதிக்கும் போதே மொட்டை மாடிக்குச் சென்ற தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.
கோபுரத்தை நோக்கியவாறு இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியவாறு கும்பிட்டுக் கொண்டே ஏதோ ஒரு பாசுரத்தை முணுமுணுத்தார். வழிபாடு முடிந்தது.
மாடியின் ஒவ்வொரு பகுதிக்கும் நகர்ந்து கொண்டிருந்த அவனை வேடிக்கை பார்த்தார் தாத்தா.
"இங்கே கெடைக்கலியே" என்றவன் சற்றுத் தள்ளி நின்று "இங்கேயும் கெடைக்க மாட்டேங்குதே" என்றான்.
"என்னப்பா கெடைக்கலே?"- பரிவுடன் கேட்டார்.
"போங்க தாத்தா, உங்களுக்கு டவர் தெரிஞ்சாப் போதும் நிம்மதி. என் செல்போனுக்கு டவர் கெடைக்கலியே! பேசாம அரசாங்கத்துக்குச் சொல்லி காலத்துக்குத் தகுந்தாப் போல செல்போன் டவரச் சின்னமாப் போடச் சொல்லுங்க. கட்டாயம் எல்லா இடத்துலேயும் கெடைக்க ஏற்பாடு பண்ணுறதுக்கு வழி பிறக்கும். மதச் சார்பற்ற அரசாங்கம்னும் பேர் கிடைக்கும்" என்று பேரன் கூறியது புரியாமல் .
Friday, March 27, 2009
நேர்காணல்
"தேர்தலுக்கு சீட் கேட்டு வந்திருக்கிறியே. உன் பரம்பரை எப்படி?"
"தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா மொழிப் போர்த் தியாகி."
"கட்சியில எவ்வளவு நாளா இருக்குற?"
"என் 18 வயசுல இருந்துங்க. கட்சி நடத்துன ஆறு போராட்டங்கள்லேயும் கலந்து சிறைத் தண்டனை பெற்றிருக்கேனுங்க."
"பண வசதி எப்படி?"
"விண்ணப் படிவம் வாங்குறதுக்கே பலரிடத்துல நன்கொடை பெற வேண்டியதாச்சு."
"சரி. நீ போகலாம். அடுத்த ஆள்..."
கனத்த உடம்புடனும் கனத்த சூட்கேசுடனும் வந்தார் ஒருவர்.
"என்னென்ன தகுதி இருக்கு?"
"என் சாதிக்காரங்க தொகுதியில மெஜாரிட்டி கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து நம்ம தொழிலுங்க!"
"கட்சியில எப்பச் சேந்தீங்க?"
"இப்பவே சேந்துடறேனுங்க!"
"எவ்வளவு செலவழிக்க முடியும்?"
"இப்போதைக்கு ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமுங்க!"
"நீங்க போகலாம்."
கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் உடனடியாக ஒரு மனதாக இரண்டாவதாக வந்தவரை வேட்பாளராக்க முடிவு செய்தனர்!
"தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா மொழிப் போர்த் தியாகி."
"கட்சியில எவ்வளவு நாளா இருக்குற?"
"என் 18 வயசுல இருந்துங்க. கட்சி நடத்துன ஆறு போராட்டங்கள்லேயும் கலந்து சிறைத் தண்டனை பெற்றிருக்கேனுங்க."
"பண வசதி எப்படி?"
"விண்ணப் படிவம் வாங்குறதுக்கே பலரிடத்துல நன்கொடை பெற வேண்டியதாச்சு."
"சரி. நீ போகலாம். அடுத்த ஆள்..."
கனத்த உடம்புடனும் கனத்த சூட்கேசுடனும் வந்தார் ஒருவர்.
"என்னென்ன தகுதி இருக்கு?"
"என் சாதிக்காரங்க தொகுதியில மெஜாரிட்டி கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து நம்ம தொழிலுங்க!"
"கட்சியில எப்பச் சேந்தீங்க?"
"இப்பவே சேந்துடறேனுங்க!"
"எவ்வளவு செலவழிக்க முடியும்?"
"இப்போதைக்கு ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமுங்க!"
"நீங்க போகலாம்."
கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் உடனடியாக ஒரு மனதாக இரண்டாவதாக வந்தவரை வேட்பாளராக்க முடிவு செய்தனர்!
Wednesday, March 25, 2009
கடன் வசூல்
"சட்டையை விடுப்பா! இது நல்லால்ல!"
அந்த முரடனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.
"நீ மட்டும் கடனைத் தராம ஏமாத்திக்கிட்டே வர்றது நல்லாயிருக்கா?"
"கடனைத் திருப்பித் தர்றேன்னு சொல்றேனில்ல."
"எவ்வளவு நாளாச் சொல்லிக்கிட்டிருக்க!"
கடைவீதியில் கூட்டம் கூடிவிட்டது.
நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இடையில் புகுந்தார்.
"தம்பீ! பொஞ்சம் பொறுப்பா."
எவ்வளவு நாளா இந்தக் கெழவன் ஏமாத்திக்கிட்டே வர்றான்னு உங்களுக்கு தெரியாதுங்க."
"சரி, அவருதான் தர்றேன்னு சொல்றாரில்ல கொஞ்சம் டைம் கொடுத்துப் பாரு,"
"எத்தனை வாட்டிங்க தர்றது? நீங்களே கேட்டுச் சொல்லுங்க!"
நடுவராக வந்தவர் முதியவரிடம் "ஐயா, கொஞ்சம் கூடுதல் நாளானாலும் பரவாயில்ல. சொல்ற நாள்ல கரெக்டாக் குடுத்திரணும்" என்றார்.
"நீங்க சொல்லிட்டீங்கள்ல. கட்டாயம் கொடுத்துர்றேன்"
"எப்ப கொடுப்பீங்க?"
"தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில கோஷ்டிப் பூசல் தீர்ந்த மறுநாளே கொடுத்திர்றேன்! போதுமா?"
மயங்கி விழுந்தார் நடுவர்!
அந்த முரடனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.
"நீ மட்டும் கடனைத் தராம ஏமாத்திக்கிட்டே வர்றது நல்லாயிருக்கா?"
"கடனைத் திருப்பித் தர்றேன்னு சொல்றேனில்ல."
"எவ்வளவு நாளாச் சொல்லிக்கிட்டிருக்க!"
கடைவீதியில் கூட்டம் கூடிவிட்டது.
நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இடையில் புகுந்தார்.
"தம்பீ! பொஞ்சம் பொறுப்பா."
எவ்வளவு நாளா இந்தக் கெழவன் ஏமாத்திக்கிட்டே வர்றான்னு உங்களுக்கு தெரியாதுங்க."
"சரி, அவருதான் தர்றேன்னு சொல்றாரில்ல கொஞ்சம் டைம் கொடுத்துப் பாரு,"
"எத்தனை வாட்டிங்க தர்றது? நீங்களே கேட்டுச் சொல்லுங்க!"
நடுவராக வந்தவர் முதியவரிடம் "ஐயா, கொஞ்சம் கூடுதல் நாளானாலும் பரவாயில்ல. சொல்ற நாள்ல கரெக்டாக் குடுத்திரணும்" என்றார்.
"நீங்க சொல்லிட்டீங்கள்ல. கட்டாயம் கொடுத்துர்றேன்"
"எப்ப கொடுப்பீங்க?"
"தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில கோஷ்டிப் பூசல் தீர்ந்த மறுநாளே கொடுத்திர்றேன்! போதுமா?"
மயங்கி விழுந்தார் நடுவர்!
Subscribe to:
Posts (Atom)
