Wednesday, March 4, 2009

உண்மையின் மறுபக்கம்

கே.எம்.விஜயன் ( ‘சத்யமேவ ஜெயதே...’ 24.02.09) ‘தினமணி’ கட்டுரைக்கு மறுப்பு கடிதம்.

"பிரிட்டிஷ்" அரசு நம்மை ஆளும் வரை மொழிவாரி மாநிலங்கள் இல்லை, எனவே, மொழியோ அல்லது தமிழினமான உணர்வோ அரசியலில் ஒரு பகுதியாக இருப்பதற்கான சாத்தியமும் தேவையும் இருக்கவில்லை," என்ற கட்டுரையாளாரின் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இறையாண்மையுள்ள ஒற்றை நாடு அல்லது அரசு அல்லது மாநிலங்கள் கிடையாது, 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகும் தனிப்படை, தனிக்கொடி, தனி நாணயம் கொண்ட ஐநுற்றுக்கும் மேற்பட்ட சுதந்திரமான, சுயேச்சையான சுதேச சமஸ்தானங்கள் இருந்தன என்பதே உண்மை.
சர்தார் படேலின் நடவடிக்கைகளால் ஒற்றை ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்ட நிலப்பகுதிகளை இந்தியா என்ற நாட்டுடன் இணைத்த காலத்தில் மொழிவழி மாநிலங்கள் என எப்பகுதியும் காண முடியாது.
“1935க்குப் பிறகு, வெள்ளையருக்கு எதிராக தேசியவாதமே அரசியலின் கூற்றாக இருந்தது; இனமான உணர்வு இல்லை” என்பதும் பொருத்தமற்றதாகும்.
அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி இனமான உணர்வுடன்தான் செயல்பட்டது, பின்னாளில் திராவிடர் கழகமாக மாறியது.
சுதந்திரத்திற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சி ராஜக்ஜப் தலைமையில் நடந்தபோது இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தாளமுத்து. நடராசன் வீர மரணம் எய்தியது வரலாறு அல்லவா?
ஜின்னாவின் பாகிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை இந்திய தேசியவாதத்துக்கு எதிரானது அல்லவா?
“1950ஆம் ஆண்டு அரசியல் சட்டம் வந்து இநதியக் கூட்டாட்சியில் மொழிவாரி மாநிலமாகத் தமிழகம் மாறியவுடன், திராவிட முன்னேற்றக் கழகம் ‘தமிழ் மொழி’ உணர்வைத் தூண்டியதால் ஆட்சியைப் பிடித்தது” என்பது வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகும்.
1950ல் சென்னை மாகாணத்துடன் ஆந்திரம் இணைந்திருந்தது, தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாநிலம் கோக்ப். பொட்டி ஸ்ரிராமுலு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததையொட்டி ஏற்பட்ட கலவரங்களுக்குப் பிறகே ஆந்திரம் தனி மாநிலமாயிற்று.
வாஞ்சி கமிசனை மத்திய அரசு அமைத்தது, அதன் பரிந்துரைகளின் பேரில் மொழிவழி மாநிலங்கள் உருவாயின. இரட்டை மொழி பேசும் பம்பாய் மாகாணம், மகாராஷ்டிரம், குஜராத் என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதை எதிர்த்துக் காங்கிரஸ்காரரான மொரார்ஜி தேசாய் உண்ணா நோன்பிருந்தார். எனினும் மக்களின் விருப்பப்படி இரு மாநிலங்கள் மொழிவழி உருவாயின.
“தமிழ் உணர்வில் அவர்கள்,(காங்கிரஸார்) எந்த வகையிலும் கழகத்தினருக்குப் பின் தங்கியவர்கள் அல்ல” என்ற கட்டுரையாளாரின் கூற்றை ஆய்வோம்.
ஆந்திரர்கள் “மதராஸ் நமதே!" என்று வலுவாக முழங்கிய காலத்தில் ம.பொ.சி. எல்லைப் போராட்டத்தை நடத்தித் திருத்தணி தமிழகத்துடன் இணைய வழியேற்படுத்தினார்.
மார்க்ஷல் நேசமணியின போராட்டத்தால் கேரளாவுடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நமக்குக் கிடைத்தது.
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரி அண்ணா போராட்டம் நடத்தினார். ஆனால் காமராஜரோ ‘குளமாவது மேடாவது’ என்று கேலி பேசினார்.
சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியபின் நம் மாநிலத்துக்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர்மாற்றம் செய்யத் தி,மு,க, கோரியது.
விருதுநகரில் சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்.
தமிழக காங்கிரஸ் அரசு, பெயர் மாற்றத்துக்கு இணங்கவில்லை. ’Madras State’ என்றால் யாருக்கும் தொரியாது என ஓங்கிக் கூறினர் அமைச்சர்களான சி,சுப்பிரமணியமும், பக்தவத்சலமும்.
ஆப்பிரிக்க நாடான "கோல்டு கோஸ்ட்" சுதந்திரம் பெற்றதுமே ‘கானா’ எனப் பெயர் மாற்றியது உட்படப் பல சான்றுகளைக் கூறியும் காங்கிரஸ் மறுத்தது.
இதில் என்ன வேடிக்கையெனில் சென்னை மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வமான பெயர் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி!’
கேரளா, ஆந்திரப்பிரதேஸ்க், கர்நாடகா என்று சுற்றிலுமுள்ள மாநிலங்கள் மொழிவழி, இனவழிபெயர்களை சூட்டியுள்ளபோது வீம்புக்காகத் தமிழ்நாடு என மாற்ற மறுத்ததன் பலனை இன்றுவரை அனுபவித்தும் இலங்கைத் தமிழர்கள் விக்ஷயத்தில் இன்னும் புத்தி வரவில்லை.
இந்திய அமைதிப்படை இலங்கை சென்று சாதித்தது என்ன?
“இந்தியத் தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தலையிட்ட இந்தியாவை அவமானப்படுத்தித் திரும்பச் செய்த சாரித்திரத்தைத் தமிழினத் தலைவர்கள் சௌகரியமாய் மறந்துவிட்டார்கள்” என்கிறஆர் கட்டுரையாளர்.
ராஜீவ் காந்தியை ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளச் சொன்னது யார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைப் பிடுங்கிப் போடச் சொன்ன இந்தியத் தமிழர்களில் எவர் பெயரையாவது கூற முடியுமா?
ஜெயவர்த்தனேவிடம் ஏமாந்து கூலிப்படையாக ‘இந்திய அமைதிப் படை’ என்ற போர்வையில் சென்ற இந்திய ராணுவம் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்தும், வயது வேறுபாடின்றித் தமிழச்சிகளை வன்புணர்ச்சி செய்ததும், தமிழர்களின் சொத்துக்களை நாசப்படுத்திக் கொள்ளையடித்ததும் உண்மை அல்லவா?
இந்திய அமைதிப் படையில் முதன்முதலாகச் சென்ற கூர்க்காப் படைப் பிரிவினர் தாங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இந்துக்களான தமிழர்கல் என்று அறிந்த மறுகணமே போராட மறுத்துத் தாயகம் திரும்பியது உண்மையா, இல்லையா?
“ராமதாஸ், வைகோ, திருமாவளவன், கருணாநிதி உள்பட அனைவருக்கும் சர்வதேச சட்டத்தின் கட்டுபாடுகளுக்கு உள்பட்டு இந்தியா இதில் எந்த வகையிலும் தலையிடமுடியாது என்று தொரியும்" எனக் கூறும் கட்டுரையாளர், இந்திராகாந்தியை அறிவிலி எனக் கருதுகிறாரா?
கிழக்குப் பாகிஸ்தானில் 'இனப்படுகொலை' நடப்பதாகப் பறையறைந்து, 'முக்திவாகினி' என்னும் போராளிக் குழுவுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் தந்து, இறுதியில் பகிங்கரமாகப் போர் அறிவிப்புச் செய்து இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேசம் மலரச் செய்தாரே அவரைச் "சர்வதேசச் சட்டத்தின் கட்டுபாடுகள்" தடுத்தனவா?
சாதாரணமான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் போரை நிறுத்தும்படி சொல்லத் தமிழக முதலமைச்சருக்கு ஒரு மாதகாலம் பிடிக்கிறது.
ஆனால், பாசில் ராஜபக்க்ஷ, மகிந்த ராஜபக்க்ஷ, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்க என்று சிங்களத் தலைவர்கள் எவர் வேண்டுமாயினும் பிரணாப் முகர்ஜியை எளிதில் சந்தித்து ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்ட உதவிகள் பெற முடிகிறது.
“இருந்தும் தேர்தலுக்கு 'தமிழின பாசிச உணர்வு' உதவும் என்பதற்காக” என எழுதும் கட்டுரையாளர் ஈழ மண்ணில் ராஜ பக்க்ஷவின் கொடூரச் செயல்களையும் அவருக்கு உதவும் மத்திய அரசின் இனப்படுகொலை ஆதரவுச் செயல்களையும் 'பாசிச உணர்வு' கொண்டவை என்று கூற ஏன் மறுக்கிறார்?
ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் சர்வதேசச் சட்டங்களை மீறிப் படுகொலை நிகழ்த்தும் சோனியா காந்தி, மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் போன்ற பாசிஸ்ட்டுகளை உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment