Monday, March 16, 2009

சிக்கினவை...(கவிதை)

நேரமில்லை தாமதம் கூடாது
சமைத்தே தீர வேண்டும்
குழம்புக்குப் பெயரா
குழப்பாதே
வெண்டைக்காய் முற்றியதால்
இல்லையொரு நஷ்டம்
கத்திரிக்காய் இல்லையா
அழுகிய தக்காளி போதும்
இங்கிலீஷ் காய்கறிகள்
கிராக்கியென்றாலும் விடாதே
சாதி மாங்காய் சேர்ந்தால்
அளவு கூடும் பந்தியை நிறைக்க
அவரை பட்டாணி பீன்ஸ்
எந்த இழவிலாவது ஒன்றைச் சேர்
வெங்காயம் வகை பாராதே
புளிதானென்று அடம் பிடிக்காதே
எலுமிச்சைக்கு வழிவிடு
சமையலிலாவது செய் புரட்சி!

No comments:

Post a Comment