Wednesday, March 25, 2009

கடன் வசூல்

"சட்டையை விடுப்பா! இது நல்லால்ல!"

அந்த முரடனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

"நீ மட்டும் கடனைத் தராம ஏமாத்திக்கிட்டே வர்றது நல்லாயிருக்கா?"

"கடனைத் திருப்பித் தர்றேன்னு சொல்றேனில்ல."

"எவ்வளவு நாளாச் சொல்லிக்கிட்டிருக்க!"

கடைவீதியில் கூட்டம் கூடிவிட்டது.

நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இடையில் புகுந்தார்.

"தம்பீ! பொஞ்சம் பொறுப்பா."

எவ்வளவு நாளா இந்தக் கெழவன் ஏமாத்திக்கிட்டே வர்றான்னு உங்களுக்கு தெரியாதுங்க."

"சரி, அவருதான் தர்றேன்னு சொல்றாரில்ல கொஞ்சம் டைம் கொடுத்துப் பாரு,"

"எத்தனை வாட்டிங்க தர்றது? நீங்களே கேட்டுச் சொல்லுங்க!"

நடுவராக வந்தவர் முதியவரிடம் "ஐயா, கொஞ்சம் கூடுதல் நாளானாலும் பரவாயில்ல. சொல்ற நாள்ல கரெக்டாக் குடுத்திரணும்" என்றார்.

"நீங்க சொல்லிட்டீங்கள்ல. கட்டாயம் கொடுத்துர்றேன்"

"எப்ப கொடுப்பீங்க?"

"தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில கோஷ்டிப் பூசல் தீர்ந்த மறுநாளே கொடுத்திர்றேன்! போதுமா?"

மயங்கி விழுந்தார் நடுவர்!

1 comment: